மும்பை: சென்னை அணிக்காக முதல் போட்டியில் விளையாடிய இலங்கையைச் சார்ந்த மதீஷா பதிரனாவுக்கு நல்ல எதிர்காலம் உண்டென சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஃபிளெம்மிங் கூறினார்.
19 வயதான இலங்கையைச் சார்ந்த மதீஷா பதிரனா நேற்றையப் போட்டியில் சென்னை அணிக்காக முதல் போட்டியில் விளையாடினார். முதல் பந்திலேயே விக்கெட்டும் எடுத்தார். அவரது பந்து வீசும் முறை மலிங்காவைப் போலவே இருக்கிறது. 3.1 ஓவரில் 2 விக்கெட்டுகளை எடுத்து 24 ரன்களுடன் எகானமி 7.6 ஆக இருந்தது.
“நாங்கள் அவரை மிகவும் எதிர்ப்பார்கிறோம். மிகவும் இளையவர். அவரது பந்து வீசும் முறை யாருடன் ஒற்றுமையாக இருக்கிறதென நாங்கள் அறிவோம். அது ஒரு தனித்துவமான திறமைதான். அவரை எப்படி உபயோகிக்கிறோம் என்பது பயிற்சியாளராக எங்களுக்கும் சவாலானது. அவர் எங்களது அணியில் விளையாடுவது எங்களுக்கு பெருமைதான். அவருக்கு சிறந்த எதிர்காலம் உண்டு” என பயிற்சியாளர் ஃபிளெம்மிங் கூறினார்.