தனக்கு மீண்டும் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்ததையொட்டி தினேஷ் கார்த்திக் நம்பிக்கையூட்டும் டிவிட் ஒன்றினை எழுதியுள்ளார்.
36 வயதாகும் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் 2022ன் சிறப்பான ஆட்டத்தினால் இந்திய அணிக்கு மீண்டும் தேர்வாகியுள்ளார்.
இந்தியா - சவுத் ஆஃப்ரிக்கா டி20 தொடரில் விளையாட வாய்ப்பு கிடைதிருக்கும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:
"நீங்கள் உங்களை நம்பினால் எல்லாமே தானாக வந்து சேரும்! என் மீதான நம்பிக்கைக்கும் உறுதுணையாக இருந்தவர்களுக்கும் நன்றி. எனது கடினமான உழைப்புத் தொடரும்".