செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ்: அசத்தும் பிரக்ஞானந்தா

செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் ஆன்லைன் செஸ் போட்டியில் தமிழரும், இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ்: அசத்தும் பிரக்ஞானந்தா

சென்னை: செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் ஆன்லைன் செஸ் போட்டியில் தமிழரும், இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இப்போட்டியில் இந்த நிலைக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 
முன்னதாக பிரக்ஞானந்தா தனது அரையிறுதியில், நெதர்லாந்தின் அனீஷ் கிரியை எதிர்கொண்டார். இருவருக்கும் இடையேயான அந்த அரையிறுதி முதலில் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. பின்னர் டை பிரேக்கரில் பிரக்ஞானந்தா 3.5 - 2.5 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றார். 
இதையடுத்து இறுதிச்சுற்றில், உலகின் 2-ஆம் நிலை வீரரான சீனாவின் டிங் லிரெனை எதிர்கொள்கிறார் பிரக்ஞானந்தா. முன்னதாக லிரென் தனது அரையிறுதியில் உலகின் நம்பர் 1 வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தினார். 
இப்போட்டியில் ஏற்கெனவே கார்ல்செனை வீழ்த்திய பிரக்ஞானந்தா நல்ல ஃபார்மில் இருக்கிறார். 11-ஆம் வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வு எழுதி வரும் அவர், இப்போட்டியின் அரையிறுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 2 மணியளவில் அனீஷ் கிரியை வீழ்த்தி, காலை 8.45 மணிக்கு பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com