பாரா கேனோ: பிராச்சி சாதனை

போலந்தில் நடைபெற்ற பாரா கேனோ உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் பிராச்சி யாதவ் வெண்கலப் பதக்கம் வென்றார். 

போலந்தில் நடைபெற்ற பாரா கேனோ உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் பிராச்சி யாதவ் வெண்கலப் பதக்கம் வென்றார். 

இப்போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் எட்டியிருக்கிறார். 

போஸ்னான் நகரில் நடைபெற்ற இப்போட்டியில், கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை மகளிருக்கான விஎல்2 200 மீட்டர் பிரிவில் பிராச்சி களம் கண்டார். அவர் பந்தய இலக்கை 1 நிமிஷம் 4.71 விநாடிகளில் இலக்கை எட்டி 3-ம் இடம் பிடித்தார். ஆஸ்திரேலியாவின் சூசன் செய்பெல் (1 நிமிஷம் 1.54 விநாடிகள்) தங்கமும், கனடாவின் பிரியானா ஹென்னெஸி (1 நிமிஷம் 1.58 விநாடிகள்) வெள்ளியும் வென்றனர். 

இப்போட்டியில் பங்கேற்ற இதர இந்தியர்களில், ஆடவருக்கான கேஎல்3 200 மீட்டரில் மனீஷ் கெüரவ், விஎல்2 200 மீட்டரில் மன்ஜீத் சிங் ஆகியோர் இறுதிச்சுற்று வரை வந்தனர். ஆடவருக்கான விஎல்3 200 மீட்டரில் ஜெய்தீப் அரையிறுதியோடு வெளியேறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com