நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உலகக் கோப்பை: நாக் அவுட் சுற்றுக்குத் தகுதியடைந்த மேலும் 4 அணிகள்!

உலகக் கோப்பையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு மேலும் 4 அணிகள் தகுதியடைந்துள்ளன.

News image

கோலடித்த இங்கிலாந்து

Updated On :30 நவம்பர் 2022, 6:45 am

DIN

கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு மேலும் 4 அணிகள் தகுதியடைந்துள்ளன.  

பிரான்ஸ், பிரேசில், போர்ச்சுகல் ஆகிய மூன்று அணிகளும் இரு ஆட்டங்களிலேயே காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதியடைந்தன. இந்நிலையில் தற்போது மேலும் 4 அணிகள் அடுத்தச் சுற்றுக்குத் தகுதியடைந்தன. 

நேற்றைய ஆட்டத்தில் செனகல் அணி ஈகுவடாரை 2-1 எனவும் நெதர்லாந்து அணி செனகலை 2-0 எனவும் அமெரிக்க அணி ஈரானை 1-0 எனவும் இங்கிலாந்து அணி வேல்ஸை 3-0 எனவும் தோற்கடித்தன. இதையடுத்து நெதர்லாந்து, செனகல், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 4 அணிகளும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குப் புதிதாகத் தகுதியடைந்துள்ளன. ஆக இதுவரை 7 அணிகள் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இன்னும் 9 அணிகள் தகுதி பெற வேண்டிய நிலைமையில் உள்ளன. 

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இரு ஆட்டங்களில் எந்தந்த அணிகள் மோதவுள்ளன என்பது தெரியவந்துள்ளது. டிசம்பர் 3 அன்று அமெரிக்கா - நெதர்லாந்து அணிகளும் டிசம்பர் 4 அன்று இங்கிலாந்து - செனகல் அணிகளும் மோதவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.