நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

உலகக் கோப்பை: நாக் அவுட் சுற்றுக்குத் தகுதியடைந்த மேலும் 4 அணிகள்!

உலகக் கோப்பையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு மேலும் 4 அணிகள் தகுதியடைந்துள்ளன.

News image

கோலடித்த இங்கிலாந்து

Updated On :30 நவம்பர் 2022, 12:15 pm IST

கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு மேலும் 4 அணிகள் தகுதியடைந்துள்ளன.  

பிரான்ஸ், பிரேசில், போர்ச்சுகல் ஆகிய மூன்று அணிகளும் இரு ஆட்டங்களிலேயே காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதியடைந்தன. இந்நிலையில் தற்போது மேலும் 4 அணிகள் அடுத்தச் சுற்றுக்குத் தகுதியடைந்தன. 

நேற்றைய ஆட்டத்தில் செனகல் அணி ஈகுவடாரை 2-1 எனவும் நெதர்லாந்து அணி செனகலை 2-0 எனவும் அமெரிக்க அணி ஈரானை 1-0 எனவும் இங்கிலாந்து அணி வேல்ஸை 3-0 எனவும் தோற்கடித்தன. இதையடுத்து நெதர்லாந்து, செனகல், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 4 அணிகளும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குப் புதிதாகத் தகுதியடைந்துள்ளன. ஆக இதுவரை 7 அணிகள் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இன்னும் 9 அணிகள் தகுதி பெற வேண்டிய நிலைமையில் உள்ளன. 

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இரு ஆட்டங்களில் எந்தந்த அணிகள் மோதவுள்ளன என்பது தெரியவந்துள்ளது. டிசம்பர் 3 அன்று அமெரிக்கா - நெதர்லாந்து அணிகளும் டிசம்பர் 4 அன்று இங்கிலாந்து - செனகல் அணிகளும் மோதவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.