5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

பாரம்பரிய நடனமாடி அசத்திய பி.வி.சிந்து! (விடியோ)

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து குஜராத்தில் பாரம்பரிய நடனமாடியது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. 

News image

பி.வி.சிந்து

Updated On :1 பிப்ரவரி 2024, 3:58 pm IST


பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து குஜராத்தில் பாரம்பரிய நடனமாடியது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. 

நவராத்திரியையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பி.வி.சிந்து, பேட்மிண்டன் முன்னாள் வீராங்கனையான திருப்தி முர்குண்டே, நீளம் தாண்டுதல் போட்டி வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் உள்ளிட்டோருடன் நடனமாடினார்.

பாரம்பரிய நடனமாடி அசத்திய பி.வி.சிந்து

பாரம்பரிய நடனமாடி அசத்திய பி.வி.சிந்து

குஜராத்தில் தேசிய விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக அகமதாபாத்தில் நவராத்திரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய பேட்மிண்டன் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து கலந்து உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர். 

Story image

இந்நிலையில், நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மேடையில் இசைக் கச்சேரி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற பி.வி.சிந்து, பாரம்பரிய இசைக்கு ஏற்றவாறு குஜராத் மக்களின் பாரம்பரிய நடனமான கர்பா நடனமாடி மகிழ்ந்தார். 

பி.வி.சிந்துவுடன், பேட்மிண்டன் முன்னாள் வீராங்கனையான திருப்தி முர்குண்டே, நீளம் தாண்டுதல் போட்டி வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் உள்ளிட்டோரும் மேடையில் நடனமாடினார். 

இந்த விடியோவை இந்திய விளையாட்டு ஆணையம் தங்களது சுட்டுரையில் பதிவிட்டுள்ளது. இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.