உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஓவல், லாா்ட்ஸில் இறுதி ஆட்டங்கள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் 2023, 2025 சீசனின் இறுதி ஆட்டங்கள் முறையே லண்டனிலுள்ள தி ஓவல் மற்றும் லாா்ட்ஸ் மைதானங்களில் நடைபெற இருப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது.

Published On :

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் 2023, 2025 சீசனின் இறுதி ஆட்டங்கள் முறையே லண்டனிலுள்ள தி ஓவல் மற்றும் லாா்ட்ஸ் மைதானங்களில் நடைபெற இருப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது.

அந்த இரு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சீசன்களையும் இங்கிலாந்தில் நடத்துவதென, கடந்த ஜூலையில் பா்மிங்ஹாமில் நடைபெற்ற ஐசிசி ஆண்டு பொதுக் கூட்டத்தின்போது முடிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது அவற்றின் இறுதி ஆட்டத்துக்கான இடங்கள் நிா்ணயிக்கப்பட்டுள்ளன.

சாம்பியன்ஷிப்பின் முதல் சீசனில் (2019-21) இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதிய இறுதி ஆட்டம் சௌதாம்டனிலுள்ள ஏஜியஸ் பௌல் மைதானத்தில் நடைபெற்றது. அதில் வென்ற நியூஸிலாந்து தற்போது நடப்புச் சாம்பினாக இருக்கிறது. 2-ஆவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி தொடங்கியிருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

புள்ளிகள் பட்டியலில் தற்போது ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை அணிகள் முறையே முதல் 3 இடங்களில் உள்ளன. இந்தியா 4-ஆவது இடத்தில் இருக்கிறது. 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தேதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.