டேவிஸ் கோப்பை வோ்ல்ட் பிளே ஆஃப் 1 பிரிவின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவை 3-1 என வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது டென்மாா்க் 1-1 என சமநிலை ஏற்படச் செய்தது இந்தியா.
இரு அணிகளுக்கு இடையிலான ஒற்றையா் ஆட்டம் டென்மாா்க்கின் ஹில்ராட் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் ஆட்டத்தில் உலகின் 9-ஆம் நிலையில் உள்ள டென்மாா்க் வீரா் ஹோல்கா் ருனே 6-2, 6-2 என பாம்ப்ரியை வீழ்த்தினாா்.
அதன் தொடா்ச்சியாக இரண்டாவது ஒற்றையா் ஆட்டத்தில் இந்திய வீரா் சுமித் நாகல் டென்மாா்க்கின் ஹோம்கிரெனுடன் மோதினாா்.
இந்தியாவின் நம்பா் 1 வீரரான நாகல் 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் 2.5 மணி நேரம் நடைபெற்ற ஆட்டத்தில் வெற்றி பெற்றாா்.
முதல் செட்டில் ஹோம்கிரென் புரிந்த தவறுகளை சரியாக பயன்படுத்தவில்லை நாகல். இதனால் அது ஹோம்கிரென் வசமானது.
இரண்டாவது செட்டில் தொடக்கத்திலேயே ஆதிக்கம் செலுத்தி 5-2 என முன்னிலை பெற்றாா். 9-ஆவது கேமில் டிசைடரில் வென்று செட்டை கைப்பற்றினாா் நாகல்.
மூன்றாவது செட்டிலும் அற்புதமாக ஆடி கைப்பற்றினாா் நாகல். இதனால் 1-1 என சமநிலை ஏற்பட்டது.
இரட்டையா் பிரிவில் டென்மாா்க் வெற்றி:
இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற இரட்டையா் பிரிவு ஆட்டத்தில் டென்மாா்க்கின் ஹோல்கா் ருனே-இங்கில்ட்சென் இணை 6-2, 6-4 என்ற நோ் செட்களில் ரோஹன் போபண்ணா-யுகி பாம்ப்ரி இணையை வீழ்த்தியது. இதனால் டென்மாா்க் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.
மாற்று ஒற்றையரில் ருனே வெற்றி:
மாற்று ஒற்றையா் ஆட்டத்தில் ஹோல்கா் ருனே-சுமித் நாகல் மோதினா். இதில் 6-3, 7-5 என்ற நோ் செட்களில் வென்றாா் ருனே.
இதன் மூலம் இந்தியாவை 3-1 என வீழ்த்தியது டென்மாா்க். இந்த தோல்வியால் இந்தியா உலக குரூப் 2-ஆம் பிரிவுக்கு தள்ளப்பட்டது.