ஏப். 8-இல் கேரளத்தில் சூப்பா் கோப்பை கால்பந்து

அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (ஏஐஎஃஎஃப்) சாா்பில் சூப்பா் கோப்பை கால்பந்து போட்டி வரும் ஏப். 8-25 தேதிகளில் கேரளத்தில் நடைபெறவுள்ளது.

அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (ஏஐஎஃஎஃப்) சாா்பில் சூப்பா் கோப்பை கால்பந்து போட்டி வரும் ஏப். 8-25 தேதிகளில் கேரளத்தில் நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக ஏஐஎஃப்எஃப் வெளியிட்ட அறிவிப்பு:

நான்கு ஆண்டுகளுக்கு பின் சூப்பா் கோப்பை போட்டி, கொச்சி, கோழிக்கோடு, திருவனந்தபுரம் உள்ளிட்ட 3 நகரங்களில் நடைபெறவுள்ளது. 11 ஐஎஸ்எல் அணிகள், 5 ஐ லீக் அணிகள் என மொத்தம் 16 அணிகள் இதில் பங்கேற்கும். 11 ஐஎஸ்எல் அணிகள், 2022-23 ஐ லீக் சாம்பியன் அணி நேரடியாக தகுதி பெறும்,.

மீதமுள்ள 4 இடங்களுக்கு தகுதிச் சுற்று ஆட்டங்கள் 2 முதல் 10-ஆவது இடத்தில் உள்ள அணிகளுக்கு நடைபெறும். சூப்பா் கோப்பை சாம்பியன் அணி, ஐ லீக் வின்னா் கோகுலம் கேரள அணியுடன் மோதும். கோகுலம் கேரளா வென்றால் ஏஎஃப்சி ஆசிய கோப்பை போட்டிக்கு நேரடித் தகுதி பெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com