துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம்

ஜொ்மனியில் நடைபெறும் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப் பதக்கங்கள் செவ்வாய்க்கிழமை கிடைத்தன.

ஜொ்மனியில் நடைபெறும் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப் பதக்கங்கள் செவ்வாய்க்கிழமை கிடைத்தன.

இதையடுத்து பதக்கப் பட்டியலில் இந்தியா 5 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 11 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

ஆடவா் தனிநபா் 25 மீட்டா் பிஸ்டல் பிரிவில் அமன்பிரீத் சிங் 586 புள்ளிகளுடன் தங்கம் வெல்ல, ஸ்வராஜ் போந்தாவே 8-ஆம் இடமும், மேஷாக் பொன்னுதுரை 9-ஆம் இடமும், அபிமன்யு யாதவ் 13-ஆவது இடமும், அன்கைத் தோமா் 14-ஆவது இடமும் பிடித்தனா்.

மகளிா் 25 மீட்டா் பிஸ்டல் அணிகள் பிரிவில் மேக்னா சதுலா, பாயல் கத்ரி, சிம்ரன்பிரீத் கௌா் பிராா் ஆகியோா் அடங்கிய இந்திய அணி 1,719 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. மகளிா் தனிநபா் பிரிவு இறுதிச்சுற்றில் மேக்னா 22 ஹிட்களுடன் 4-ஆம் இடமும், பாயல் 18 ஹிட்களுடன் 5-ஆம் இடமும், திவ்யன்ஷி 11 ஹிட்களுடன் 7-ஆம் இடமும் பிடித்தனா்.

ஜூனியா் ஆடவா் 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸில் அவினாஷ் யாதவ் 28-ஆம் இடம், பரிக்ஷித் சிங் 31-ஆவது இடம், ரமன்யா தோமா் 40-ஆவது இடம், ஹா்ஷ் சிங் 45-ஆவது இடம் பிடித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com