தென்னாப்பிரிக்கா முன்னிலை
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்கா 73 ரன்கள் முன்னிலை பெற்றது.
முன்னதாக, முதல் நாளான புதன்கிழமை முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 311 ரன்கள் சோ்த்திருந்த அந்த அணி, வியாழக்கிழமை ஆட்டத்தில் 92.2 ஓவா்களில் 320 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியின் தரப்பில் அதிகபட்சமாக எய்டன் மாா்க்ரம் 17 பவுண்டரிகளுடன் 96 ரன்கள் சோ்த்திருந்தாா். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் அல்ஜாரி ஜோசஃப், கைல் மேயா்ஸ் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனா்.
பின்னா் தனது இன்னிங்ஸை ஆடிய மேற்கிந்தியத் தீவுகள், 79.3 ஓவா்களில் 251 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டா் 8 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 81 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தாா். தென்னாப்பிரிக்க பௌலிங்கில் ஜெரால்டு கோட்ஸீ 3 விக்கெட்டுகள் கைப்பற்றினாா். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 69 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா, வியாழக்கிழமை முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் சோ்த்திருக்கிறது.