'தமிழ்நாடே மணக்குது சிஎஸ்கே வெற்றி வாசத்துல..' - சொன்னது யார் தெரியுமா?

நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்துள்ளார். 
'தமிழ்நாடே மணக்குது சிஎஸ்கே வெற்றி வாசத்துல..' - சொன்னது யார் தெரியுமா?

நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், 'மதுரைல சொல்லுவாங்க யாரா இரு.. எவனா இரு.. Line-ல கரெக்டா இருன்னு. அதுவே சென்னைன்னு வந்துட்டா யாரா இரு.. எவனா இரு "Lion" கிட்ட கரெக்ட்டா இரு.. தமிழ்நாடே மணக்குது சிஎஸ்கே  வெற்றி வாசத்துல' என்று பதிவிட்டுள்ளார்.

16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 24 வது லீக் போட்டி, நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையே நடைபெற்றது.

டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்தது. 227 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 8 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி பெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com