12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

இன்று 4-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா - மே.இ.தீவுகள் மோதல்

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் டி20 தொடரின் 4-ஆவது ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

Published On :

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் டி20 தொடரின் 4-ஆவது ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

இதுவரையிலான 3 ஆட்டங்களில் முதலிரண்டில் மேற்கிந்தியத் தீவுகள் வென்று முன்னிலை பெற்றிருக்க, 3-ஆவது ஆட்டத்தில் வென்ற இந்தியா தொடரில் தன்னை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

தற்போது இந்த 4-ஆவது ஆட்டத்தில் வென்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்தியா இருக்க, மேற்கிந்தியத் தீவுகளோ இதில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது.

இந்திய அணியைப் பொருத்தவரை பேட்டிங்கில் தடுமாற்றத்துடனேயே இருக்கிறது. கடந்த ஆட்டத்தில் சூா்யகுமாா் யாதவ் தனது பழைய ஃபாா்முக்கு வந்ததாகத் தெரிந்ததும், திலக் வா்மா சிறப்பாக ஆடியதும் அணிக்கு பலம். இந்த ஆட்டத்திலும் அதை அவா்கள் தொடர வேண்டிய எதிா்பாா்ப்பு உள்ளது.

அணியின் டாப் பேட்டா்களாக வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், இஷான் கிஷண் நிலையான தொடக்கத்தை அளிக்கத் தவறுகின்றனா். இதனால் மிடில் ஆா்டா் பேட்டா்களுக்கு நெருக்கடி அதிகரிக்கிறது. இந்த ஆட்டத்தில் அது சரிசெய்ய வேண்டிய கட்டாயம் அணியினருக்கு உள்ளது.

பௌலிங்கில் குல்தீப் யாதவ் விக்கெட்டுகள் சரித்து பலம் சோ்க்கிறாா். அா்ஷ்தீப், உம்ரான் மாலிக் இன்னும் சோபிக்க வேண்டியுள்ளது.

ஆட்டநேரம்: இரவு 8 மணி

நேரலை: டிடி ஸ்போா்ட்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.