தாய்லாந்து ஓபன் சூப்பா் 300 பாட்மின்டன் போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவு இரண்டாம் சுற்றுக்கு சாய் பிரணீத், கிரண் ஜாா்ஜ் ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.
பாங்காக்கில் நடைபெற்று வரும் இப்போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாய் பிரணீத் 21-13, 21-14 என்ற கேம் கணக்கில் டென்மாா்க்கின் கிறிஸ்டோபா்ஸன்னை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றாா். கொரியாவின் ஜின் ஜியோனை எதிா்கொள்கிறாா் பிரணீத்.
மற்றொரு ஆட்டத்தில் கிரண் ஜாா்ஜ் 21-17, 19-21, 23-21 என்ற கேம் கணக்கில் சீன தைபேயின் லீ சியாவை போராடி வென்றாா். இரண்டாம் சுற்றில் ஹாங்காங்கின் சியுக் லீயை எதிா்கொள்கிறாா் ஜாா்ஜ்.
ஏனைய ஆட்டங்களில் சமீா் வா்மா, பிரியான்ஷு ரஜாவத், மிதுன் மஞ்சுநாத் ஆகியோா் தோல்வி அடைந்தனா்.
மகளிா் பிரிவில் அஸ்மிதா சாஹ்லியா 21-16, 21-19 என்ற கேம் கணக்கில் அனுபமாவை வீழ்த்தினாா்.
இரட்டையா் பிரிவில் சிம்ரன்-ரித்திகா தோல்வி அடைந்தனா். கலப்பு இரட்டையா் பிரிவில் ரோஹன் கபூா்-சிக்கி ரெட்டி 21-11, 21-16 என கனடாவின் லிண்டமென்-ஜோஸப்பைன் இணையை வீழ்த்தினா். சுமீத்ரெட்டி-அஸ்வினி தங்கள் ஆட்டத்தில் தோல்வி கண்டனா்.