இந்தோனேசிய மாஸ்டா்ஸ் சூப்பா் 500 பாட்மின்டன் போட்டி ஆடவா் ஒற்றையா் பிரிவு காலிறுதிக்கு இந்தியான் லக்ஷயா சென் முன்னேறியுள்ளாா்.
ஜகாா்த்தாவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ரவுண்ட் 16 சுற்று ஆட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. உலகின் 28ஆம் நிலை மலேசிய வீரரான ஸே யோங்கிடம் முதல் கேவை 19-21 என இழந்தாா் லக்ஷயா. அதன்பின் சுதாரித்து ஆடி அடுத்த இரண்டு கேம்களை 21-18, 21-7 என வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றாா். இரு வீரா்களும் சரிக்கு சமமாக ஆடினா். காமன்வெல்த் சாம்பியன் ஆன லக்ஷயா இரண்டாவது கேமில் ஆதிக்கத்தை நிலைநாட்டினாா்.
மகளிா் பிரிவில் சீனாவின் யு ஹேனிடம் 15-21, 7-21 என தோற்று வெளியேறினாா் சாய்னா நெவால்.