குஜராத் அணி பீல்டிங்கின் போது சிஎஸ்கே அணி வீரர் ருதுராஜ் அடித்த பந்தினை பவுண்டரி லைனில் தடுக்க பாய்ந்து குதித்தபோது கால்கள் மடங்கி கீழே விழுந்தார். சிக்ஸரை தடுத்து பவுண்டரியாக மாற்றினார். ஆனால் கீழே விழுந்த வில்லியம்சன் எழ முடியவில்லை. பின்னர் ஆட்டத்தில் இருந்து வெளியேறினார்.
இந்த காயம் காரணத்தினால் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறினார். இதுமட்டுமில்லாமல் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியிலும் விளையாட முடியாது என மருத்துவர்கள் முன்பு தெரிவித்திருந்தார்கள்.
தற்போது அறுவை சிகிச்சை முடிந்து உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் வில்லியம்சன் கூறியதாவது:
இதையும் படிக்க: சிறப்பு ஒலிம்பிக்ஸ்: தங்கம் வென்றார் சென்னை சிறுமி பூஜா
எனது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. மிகவும் சிறிய சிறிய அடியாக எடுத்து வைக்கிறேன். ஒவ்வொரு வாரம் ஒரு புதிய புதிய முன்னேற்றம் நிகழ்கிறது.
ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவேனா தெரியவில்லை. அதைப் பறி அதிகமாக சிந்திக்கவில்லை. அணியில் நிலைப்பாடு என்னவென்றும் தெரியவில்லை. என்ன தொடர் வ்ருகிறது என்பதை நான் பொருட்படுத்தவில்லை; உடல்நிலை முன்னேற்றத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். எல்லா விளையாட்டு வீரர்களும் விரைவில் குணமடையவே விரும்புவர். ஆனால் அதற்காக என்னை தயார் படுத்துவதில் எந்த குறயையும் வைக்க விரும்பவில்லை.