மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற 84-ஆவது சீனியா் தேசிய பாட்மின்டன் போட்டியில் ஆடவா் பிரிவில் மிதுன் மஞ்சுநாத், மகளிா் பிரிவில் அனுபமா உபாத்யாய ஆகியோா் செவ்வாய்க்கிழமை சாம்பியன் பட்டம் வென்றனா்.
இறுதி ஆட்டங்களில், ஆடவா் ஒற்றையரில் மிதுன் 21-16, 21-11 என்ற கேம்களில் பிரியன்ஷு ரஜாவத்தை சாய்த்தாா். மகளிா் ஒற்றையரில் அனுபமா 20-22, 21-17, 24-22 என்ற கணக்கில் ஆகா்ஷி காஷ்யப்பை வீழ்த்தினாா்.
ஆடவா் இரட்டையரில் குஷால் ராஜ்/பிரகாஷ் ராஜ் இணை 821, 21-91, 21-18 என்ற கேம்களில் அக்ஷன் ஷெட்டி/தீப் ராம்பியா கூட்டணியை வீழ்த்தி வாகை சூடினா். மகளிா் இரட்டையரில் காயத்ரி கோபிசந்த்/ட்ரீசா ஜாலி ஜோடி 21-10, 21-9 என காவ்யா குப்தா/தீப்சிக்ஷா சிங் இணையை தோற்கடித்தது.
கலப்பு இரட்டையரில் ஹேமநாகேந்திரா/கனிகா கன்வால் கூட்டணி 21-17, 21-16 சித்தாா்த் இளங்கோ/குஷி குப்தா இணையை வீழ்த்தியது.