தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

இந்தியா, தென்னாப்பிரிக்காவை வீழ்த்துவது மிகவும் கடினம்: ஸ்டீவ் ஸ்மித்

புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளை வீழ்த்துவது மிகவும் கடினம் என ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

Published On :2 பிப்ரவரி 2024, 8:47 am IST

புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளை வீழ்த்துவது மிகவும் கடினம் என ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பைத் தொடரில் நாளை (நவம்பர் 7) மும்பை  வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. நடப்பு உலகக் கோப்பையில் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற இந்த இரு அணிகளுக்கும்  நாளை நடைபெறும் போட்டி மிகவும் முக்கியமானதாகும். நாளையப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி  வெற்றி பெறும்பட்சத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இந்த நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளை வீழ்த்துவது மிகவும் கடினம் என ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: உலகக் கோப்பையில் அரையிறுதியில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் இடம்பெற வேண்டும் என்ற எண்ணம் அனைத்து அணிகளுக்கும் இருக்கும். ஆனால், அரையிறுதிக்குத் தகுதி பெற அந்தந்த அணிகள் கண்டிப்பாக தங்களது கடின உழைப்பை கொடுக்க வேண்டும். நாங்கள் அரையிறுதியில் இடம்பெற வேண்டும் என நான் விரும்புகிறேன். நடப்பு உலகக் கோப்பையின் தொடக்கத்தில் சில தோல்விகளைத் தழுவினாலும், பின்னர் வெற்றிப் பாதைக்குத் திரும்பினோம்.

நாளை எங்களுக்கு மிகப் பெரிய போட்டி உள்ளது. ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் அரையிறுதிக்குத் தகுதி பெறும் என நினைக்கிறேன். புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகளான இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா சிறப்பான கிரிக்கெட்டை விளையாடுகிறார்கள். அவர்களை வெல்வது மிகவும் கடினம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.