மழையால் பாதிக்கப்பட்டால் மறுநாள் இந்தியா-பாகிஸ்தான் போட்டி: ஆசிய கிரிக்கெட் கவுன்சில்

சூப்பர் 4 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டி வானிலை காரணமாக பாதிக்கப்பட்டால் போட்டியை அடுத்த நாள் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது. 
மழையால் பாதிக்கப்பட்டால் மறுநாள் இந்தியா-பாகிஸ்தான் போட்டி: ஆசிய கிரிக்கெட் கவுன்சில்

சூப்பர் 4 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டி வானிலை காரணமாக பாதிக்கப்பட்டால் போட்டியை அடுத்த நாள் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது. 

ஆசியக் கோப்பை தொடரில் நாளை மறுநாள் (செப்டம்பர் 10) இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 போட்டி நடைபெறவுள்ளது. இலங்கையில் நடைபெறும் இந்தப் போட்டி மழையினால் பாதிக்கப்பட  வாய்ப்புள்ளதாக தெரிகிறது. லீக் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி மழை காரணத்தால் முடிவு கிடைக்காமல் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. அதே மாதிரியான சூழல் தற்போது இரு அணிகள் மோதும் சூப்பர் 4 சுற்றிலும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், சூப்பர் 4 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டி வானிலை காரணமாக பாதிக்கப்பட்டால் போட்டியை அடுத்த நாள் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது. 

இது தொடர்பான அறிக்கையில் ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்திருப்பதாவது: நாளை மறுநாள் (செப்டம்பர் 10) இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டிக்கு கூடுதலாக ஒருநாள் ஒதுக்கப்பட்டுள்ளது. வானிலை காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டி நிறுத்தப்பட்டால், நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து அடுத்த நாள் (செப்டம்பர் 11) போட்டி நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் நடைபெறும் மற்ற சூப்பர் 4 போட்டிகள் எதற்கும் கூடுதல் நாள் என்பது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com