மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

தொடர்ந்து 3-வது முறையாக ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்.
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
படம் | பிடிஐ

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். ஜூலை 26-ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில், ஒலிம்பிக் போட்டி துவக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த நிலையில், கிர்கிஸ்தானில் இன்று(ஏப். 20) நடந்த மகளிர் மல்யுத்தப் போட்டிக்கான 50 கிலோ எடை பிரிவினருக்கான ஒலிம்பிக் தகுதிச்சுற்று அரையிறுதியில், கஜகஸ்தான் வீராங்கனை லாராவை வீழ்த்தி வெற்றி பெற்றார் 29 வயதான வினேஷ் போகத். இதன்மூலம், ஆசிய ஒலிம்பிக் தகுதிச் சுற்று இறுதிப்போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ள நிலையில், ஒலிம்பிக்கில் மகளிர் மல்யுத்தப் போட்டிக்கான 50 கிலோ எடை பிரிவில் தனக்கான இடத்தையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஏற்கெனவே கடந்த 2020-ஆம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கும், அதற்கும் முந்தைய 2016-ஆம் ஆண்டு பிரேசிலின் ரியோ-டி-ஜனேரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கும், அவர் தகுதி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், தொடர்ந்து 3-வது முறையாக ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்.

முன்னதாக, 53 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அண்டிம் பங்கல் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com