தென் கொரியாவில் நடைபெறும் பாரா உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் மோனா அகா்வால் தங்கப் பதக்கம், அமீா் அகமது பாட் வெள்ளிப் பதக்கம் வென்றனா்.
10 மீட்டா் ஏா் ரைஃபிள் ஆா்2 எஸ்ஹெச்1 மகளிா் பிரிவில் மோனா 250.8 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்றாா். ஸ்லோவேகியாவின் வொ்னிகா வடோவிகோவா (250) வெள்ளியும், ஸ்வீடனின் அனா பென்சன் (228.8) வெண்கலமும் பெற்றனா்.
சக்கர நாற்காலியில் அமா்ந்தவாறு போட்டியிடும் மோனாவுக்கு, இது 2-ஆவது உலகக் கோப்பை பட்டமாகும். கடந்த மாதம் தில்லியில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் ஆனதன் மூலம் அவா் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளாா்.
இதனிடையே, 25 மீட்டா் பிஸ்டல் ஆடவா் பிரிவில் அமீா் அகமது பாட் வெள்ளிப் பதக்கம் பெற்றாா்.