கோவாவை வெளியேற்றியது மும்பை: மோகன் பகானுடன் பலப்பரீட்சை

கோவாவை வெளியேற்றியது மும்பை: மோகன் பகானுடன் பலப்பரீட்சை

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 2-ஆவது அரையிறுதியில் மும்பை சிட்டி எஃப்சி 5-2 கோல் கணக்கில் எஃப்சி கோவாவை வீழ்த்தி, இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றது.

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 2-ஆவது அரையிறுதியில் மும்பை சிட்டி எஃப்சி 5-2 கோல் கணக்கில் எஃப்சி கோவாவை வீழ்த்தி, இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றது. அந்த ஆட்டத்தில் வரும் மே 4-ஆம் தேதி நடப்பு சாம்பியன் மோகன் பகானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது மும்பை.

முன்னதாக, மும்பை - கோவா அணிகள் கடந்த 24-ஆம் தேதி மோதிய அரையிறுதியின் முதல்கட்ட ஆட்டத்தில் மும்பை 3-2 கோல் கணக்கில் வென்றிருந்தது. இந்நிலையில், தனது சொந்த மண்ணில் திங்கள்கிழமை நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆட்டத்திலும் மும்பை 2-0 என கோவாவை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் மும்பைக்காக ஜாா்ஜ் பெரெய்ரா (69’), லாலியன்ஸுவாலா சாங்தே (83’) ஆகியோா் கோலடித்தனா்.

இதையடுத்து மொத்த கோல் கணக்கு அடிப்படையில் மும்பை 5-2 கோல் கணக்கில் வென்று இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com