ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

எழுத்தாளர் மணவை முஸ்தபா நூல்கள் நாட்டுடைமை

சென்னை, மார்ச் 31: அறிவியல் தமிழ் எழுத்தாளர் மணவை முஸ்தபாவின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இதற்காக மணவை முஸ்தபாவுக்கு பரிவுத் தொகையாக ரூ.10 லட்சம் அளிக்கப்ப

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:04 am

தினமணி

சென்னை, மார்ச் 31: அறிவியல் தமிழ் எழுத்தாளர் மணவை முஸ்தபாவின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இதற்காக மணவை முஸ்தபாவுக்கு பரிவுத் தொகையாக ரூ.10 லட்சம் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்தி:

அறிவியல் தமிழ் எழுத்தாளர் மணவை முஸ்தபா 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்த் தொண்டு ஆற்றி வருகிறார். மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம், கணினிக் கலைச்சொல் களஞ்சிய அகராதி போன்ற அவரது நூல்கள் பரிசுகள் பல பெற்றுள்ளன.

மேலும், தமிழக அரசின் கலைமாமணி விருது, திரு.வி.க. விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

இப்போது முழுமையாகப் பேசவோ, எழுந்து செயல்படவோ இயலாத நிலையில், உடல்நலம் குன்றியுள்ள நிலையில் உள்ளதாக முதல்வர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் அவர் தெரிவித்திருந்தார்.

மருத்துவச் செலவுக்கு பயன்படும் வகையில், தமது படைப்புகள் அனைத்தையும் நாட்டுடைமையாக்கி, தமக்குப் பரிவுத் தொகை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்று, சிறப்பு நிகழ்வாகக் கருதி மணவை முஸ்தபாவின் படைப்புகளை நாட்டுடைமையாக்கி, அவருக்கு ரூ.10 லட்சம் பரிவுத் தொகை வழங்க முதல்வர் கருணாநிதி புதன்கிழமை உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.