சிலை திருட்டு வழக்கில் 6 பேருக்கு தண்டனை ரத்து:​ உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, மே 18: திருச்சி அருகே சிலை திருட்டில் ஈடுபட்டதாகக் கூறி 6 பேருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. திருச்சி விக்கிரமங்கலம் அருகே உள்
சிலை திருட்டு வழக்கில் 6 பேருக்கு தண்டனை ரத்து:​ உயர்நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

சென்னை, மே 18: திருச்சி அருகே சிலை திருட்டில் ஈடுபட்டதாகக் கூறி 6 பேருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. திருச்சி விக்கிரமங்கலம் அருகே உள்ள ஸ்ரீ வேத நாராயண பெருமாள் கோயிலில் கடந்த 1986-ம் தேதி சிலைகள் திருட்டுப் போயின. இதுதொடர்பாக, கிராம நிர்வாக அதிகாரி போலீஸில் புகார் செய்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில், காளி, துரை ரங்கராஜன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செயய்ப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த அரியலூர் நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் தலா 10 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்ததது. இதை எதிர்த்து தண்டனை பெற்ற அனைவரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு விவரம்: சிலை திருட்டு வழக்கில் சந்தர்ப்ப சூழ்நிலைகளும், சாட்சியங்களும் அரசுத் தரப்பு வாதங்களுக்கு ஆதரவாக இல்லை. குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால், குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுகின்றனர் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com