

ஓய்வூதியதாரர்கள் இறக்கும்போது அவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவியை ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த நிதி இப்போது ரூ.35 ஆயிரமாக வழங்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
ஒளிவுமறைவற்ற, வெளிப்படையான, ஊழலற்ற திறமையான மற்றும் பொறுப்புள்ள நிர்வாகத்தை அளிப்பதுதான் ஒரு நல்ல அரசின் இலக்கணம். இதையே குறிக்கோளாகக் கொண்ட முதல்வர் ஜெயலலிதா, அரசு இயந்திரத்தையும், அதன் பணியாளர்களையும் முழுமையாகப் பயன்படுத்தி அரசால் வகுக்கப்படும் திட்டங்கள் சிறப்புடன் செயல்படுத்தப்படவும், அதன் பலன்கள் யாவும் மக்களுக்கு உரிய நேரத்தில் திட்டமிட்டவாறு சென்றடையச் செய்யவும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்வதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் அரசுப் பணியாளர்கள். இப்படிப்பட்ட சிறந்த வாய்ந்த அரசு ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு பணியாற்றும்போதும், அவர்கள் ஓய்வு பெற்ற பிறகும் பல்வேறு சலுகைகளை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு அளித்து வருகிறது.
குடும்ப நல நிதி: ஓய்வூதியதாரர்கள் இறக்கும்போது அவர்களது வாரிசுகளுக்கு ஓய்வூதியதாரர்கள் குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டு வரும் நிதி உதவியை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரமாக கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டது.
ஓய்வூதியதாரர்கள் குடும்ப பாதுகாப்பு நிதியில் இருந்து, ஓய்வூதியதாரர்கள் இறக்கும்போது அவர்களது குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவியை ரூ.35 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.