ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவில்லித்தூர் பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2014, 2:55 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பூவாணி-சங்கப்பநாயக்கன்பட்டியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாலினி (4), முகீஸ்காவியா (3) ஆகியோர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். தங்கேஸ்வரி (14), லோகானந்த் (12) ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இருவர் திருநெல்வேலி ஹைகிரவுண்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது ஆர்.ரெட்டியபட்டி மருத்துவ அலுவலர் நாராயணன் தலைமையில் மருத்துவக் குழுவினர் கிராமத்தில் முகாமிட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மம்சாபுரம் பேரூராட்சி, காந்திநகர், நரையன்குளம், ஒத்தப்பட்டி காலனி பகுதிகளில் ஒருவித மர்ம காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. கடுமையான காய்ச்சல், கண் எரி்ச்சல், உடல் சோர்வு, கை கால் வலியால் பாதிக்கப்பட்டவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையிலும் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இப் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தும் இந்நோய் தடுப்பிற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் இப்பகுதியில் பரவி வரும் மர்ம காய்ச்சலை தடுக்க, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.