இருவர் மட்டுமே வீட்டில் உள்ளார்கள். புதன்கிழமை இரவு 10 மணிக்கு மேல் வெளியே சென்றுவிட்டு, இருவரும் வீட்டினுள் செல்ல கதவை திறந்துள்ளார்கள். அமுதா திறந்து உள்ளே சென்று, சமையல் அறையில் இருந்துள்ளார். மாரிக்கனி பின்னால் கதவைப் பூட்டிவிட்டு உள்ளே செல்ல முயன்றபோது, வீட்டின் சுற்றுச்சுவரை ஒட்டி ஒளிந்திருந்த 3 கொள்ளையர்கள் மாரிக்கனியுடன் சேர்ந்து வீட்டினுள் சென்றுள்ளார்கள். கொள்ளையர்கள் கதவைப் பூட்டிவிட்டு, மாரிக்கனியை நாற்காலியில் அமர வைத்து கை, கால்களை கட்டி வாயில் பிளாஸ்திரி போட்டு ஒட்டி வைத்துள்ளார்கள். இது சமையல் அறையில் இருந்த அமுதாவிற்கு தெரியவில்லை.