ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நரையன்குளம் ஒத்தப்பட்டி, அக்கரைப்பட்டி மற்றும் நகராட்சி நடுநிலைப் பள்ளி கம்மாப்பட்டி, பெருமாள்பட்டி ஆகிய 4 பள்ளிகளில் நடைபெறுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் வாரத்திற்கு தலா ஒன்னறை மணி நேரம் கொண்டு இரு நாட்களுக்கு இப் பயிற்சி வழங்கப்படுகிறது. மாநில சோட்டோகான் தலைமைப் பயிற்சியாளர் சென்சாய் எம்.செபஸ்தியான் இப் பயிற்சியை வழங்குகிறார் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் ஆசிரியப் பயிற்றுநர்கள் தர்மர், ஜூடு அமலன், தலைமை ஆசிரியை இ.ஜெஸிந்தா, பட்டதாரி ஆசிரியர்கள் பா.பாத்திமா ஞானம், வே.ராஜேஸ்வரி, செ.சண்முகநாதன், இடைநிலை ஆசிரியர்கள் ச.பொன்மலர், கோ.ஜெயக்குமார் ஞானராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பள்ளி மேலாண்மைக் குழு தலைவி அ.சீத்தாலட்சுமி நன்றி கூறினார்.