ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண்ணிடம் வழிப்பறி

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் முகவரி கேட்பது போல வந்து, அவர் அணிந்திருந்த செயினை பறித்துச் சென்ற இரு இளைஞர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

News image
Updated On :16 ஆகஸ்ட் 2015, 6:20 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் முகவரி கேட்பது போல வந்து, அவர் அணிந்திருந்த செயினை பறித்துச் சென்ற இரு இளைஞர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர், வன்னியம்பட்டி சந்திப்புக்கு முன்னால் உள்ள மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் ரெ.வசுமதி (52). இவர் மதுரைக்குச் சென்றுவிட்டு வன்னியம்பட்டி சந்திப்பு பேருந்து நிறுத்தத்திற்கு முந்தை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் இவருக்கு முன்னாகச் சென்று வண்டியை நிறுத்தியுள்ளனர். பின்னால் உட்கார்ந்திருந்தவர் இறங்கிச் சென்று வசுமதியிம் முகவரி கேட்பது போல நடித்து அவர் அணிந்திருந்த இரண்டே கால் பவுன் செயினை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டாராம்.

இது குறித்து வசுமதி, வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய நபர்களைத் தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.