வத்திராயிருப்பு, மகாராஜபுரம்-மாத்தூர் சாலையில் இறைச்சிக் கடை வைத்திருப்பவர் ஜீவானந்தம். இவர் கடையில் உள்ள மேடை தராசு மற்றும் எடைக் கற்களில் அரசு முத்திரையிடுவதற்காக 19.9.2005-ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு வந்துள்ளார். அங்கிருந்த முத்திரை ஆய்வாளர் குருசாமி, முத்திரை வைக்க ரூ.200 லஞ்சம் கேட்டுள்ளார். இதனைத் தர மனதில்லாத ஜீவானந்தம், விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்தார். அவர்களது ஆலோசனையின் பேரில், ரசாயன பொடி தடவப்பட்ட பணம் ரூ.200 யை 21.9.2005-ம் தேதி ஜீவானந்தம், முத்திரை ஆய்வாளர் குருசாமியிடம் கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் குருசாமியைக் கைது செய்தனர்.