சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் இன்று மேலும் 20 தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இதுவரை 10 ஆயிரம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் படையின் தலைமை இயக்குநர் ஓ.பி. சிங் கூறியுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட குழுவினர், பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.
தற்போது தமிழகத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் எண்ணிக்கை 50 ஆக உள்ளது. இன்று மழை நீர் வடியத் தொடங்கியதால், மீட்புப் பணிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.