

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி டிசம்பர் 8 ஆம் தேதி பார்வையிடுகிறார்.
கடந்த இரு வாரமாக கொட்டி தீர்த்த கனமழையால், சென்னை மாநகரமே தீவாக மாறியது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான இடங்களில் தண்ணீர் புகுந்தது. மக்களின் இயல்வு வாழ்க்கையை முடங்கியது. மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு இதுவரை 245 பேர் இறந்துள்ளனர்.
இந்நிலையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை நகரை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி டிசம்பர் 8 ஆம் தேதி பார்வையிட உள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.