மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

சென்னை வெள்ளம்: வான்வழி மீட்பு நிறுத்தம்

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகரில் வான்வழியாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :6 டிசம்பர் 2015, 3:01 pm

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகரில் வான்வழியாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து மீட்பு பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து மேற்கொண்டு எந்தவித உத்தரவும் இல்லாததாலும், மழை, வெள்ளம் வடிந்து வருவதாலும் வான் வழியாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து நிவாரணப் பணிகளும் நேற்று மாலையுடன் நிறுத்தப்பட்டுள்ளது என இந்திய விமானப்படை அதிகாரி ஒருவர் கூறினார்.

இதுவரை சுமார் 1,500 பேர் வான்வழியாக மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், 400 மாணவ, மாணவிகள் இங்கிருந்து மீட்கப்பட்டு தில்லி மற்றும் ஹைதராபாத் நகரில் இறக்கிவிடப்பட்டனர்.

இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர்கள் அனைத்தும் தாம்பரத்தை மையமாக கொண்டு மீட்பு பணிகளை மேற்கொண்டன. மீட்பு பணியில் ஈடுபட்ட அனைத்து ஹெலிகாப்டர்களும் மீண்டும் தங்களுக்கு இடங்களுக்கு திரும்பிவிட்டன.

அரக்கோணத்தில் கடற்படைக்கு சொந்தமான விமான தளத்திலிருந்து இன்று காலை ஒரு பயணிகள் விமானம் ஹைதரபாத்துக்கு 50 பயணிகளுடன் இயக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.