வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபடும் தனியார்: பாதுகாப்பு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் தனியார்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபடும் தனியார்: பாதுகாப்பு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
Updated on
1 min read

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் தனியார்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் ஏ.பி. சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனுவை நாளை விசாரணைக்கு வருகிறது.

அவர் தாக்கல் செய்துள்ள மனு விவரம்:

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜெமினி அருகேயுள்ள செவித்திறன் குறைவுற்றோர் பள்ளிக்கு நிவாரணப் பொருள்கள் வழங்குவதற்காக டிசம்பர் 3 ஆம் தேதி சென்றோம். அப்போது அங்கு வந்த குண்டர்கள் எங்களை தடுத்ததோடு, நிவாரணப் பொருள்களை தங்களிடம் வழங்கிட்டு செல்லுமாறு மிரட்டினர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் அரசு நிர்வாகத்துக்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லா நிலையில், கைவசம் உள்ள நிவாரணப் பொருள்களை யாருக்கு வழங்குவது என தெரியாமல் உள்ளனர் தன்னார்வலர்கள்.

அரசு தரப்பில் வழிகாட்டுவதற்கும், உத்தரவிடுவதற்கும் யாருமே இல்லை. எனவே, வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஒரு சிறிய அளவிலான வெள்ள நிவாரணக் குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாஷ் வலியுறுத்திய நிலையில் நீதிபதி எம்.எம். சுந்தரேஷ்  நாளை விசாரிக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com