நேஷனல் ஹெரால்டு பிரச்னையால் காங்கிரஸுக்கு ஆபத்து: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

நேஷனல் ஹெரால்டு பிரச்னையால் காங்கிரஸுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது குறித்து பயந்துவிடமாட்டோம் என அக்கட்சியின் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
நேஷனல் ஹெரால்டு பிரச்னையால் காங்கிரஸுக்கு ஆபத்து: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
Updated on
1 min read

நேஷனல் ஹெரால்டு பிரச்னையால் காங்கிரஸுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது குறித்து பயந்துவிடமாட்டோம் என அக்கட்சியின் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

நேஷனல் ஹெரால்டு பிரச்னையில் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத்தலைவர் ராகுல் நேரில் ஆஜராகும்படி புதுதில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதாக கூறி மதுரை ஓபுளாபடித்துறையில் சனிக்கிழமை கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று அவர் பேசியது: நாட்டுக்காக நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோர் பல தியாகங்களைச் செய்துள்ளனர். ஆனால், தற்போது நேஷனல் ஹெரால்டு பிரச்னையால் காங்கிரஸுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதைக் கண்டு காங்கிரஸார் பயந்துவிடமாட்டார்கள்.

பிரதமர் நரேந்திரமோடி வெற்றி பெற்று நாட்டுக்கு நல்லது செய்வதை விட்டுவிட்டு காங்கிரஸைப் பழிவாங்கும் போக்கில் செயல்படுகிறார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர் ஜவஹர்லால் நேரு. நாட்டில் ஜனநாயகத்தை காக்க உயிர்துறந்தவர் இந்திரா. தீவிரவாதத்தை எதிர்த்து உயர்நீத்தவர் ராஜீவ்காந்தி. உலகில் இந்தியா தலைநிமிரப்பாடுபட்ட காங்கிரஸ் குடும்பத்தை பழிவாங்குவது சரியல்ல என்று கூறினார்.

மத்திய அரசு மற்றும் சுப்பிரமணியசுவாமியைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com