விருதுநகர் அருகே விவசாயிகளுக்கு சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பூவாணி தொட்டியபட்டியில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் வேளாண் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் நடந்த தொழில்
Updated on
1 min read

தென்னை மற்றும் மா விவசாயிகள் பயனடையும் வகையில் சாகுபடி தொழில் நுட்ப பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பூவாணி தொட்டியபட்டியில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் வேளாண் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் நடந்த தொழில் நுட்ப பயிற்சி முகாமிற்கு வேளாண் இணை இயக்குநர் பூவலிங்கம தலைமை வகித்தார். தோட்டக்கலைத்துறை இயக்குநர் ராதாகிருஷ்ணன், வேளான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில், சாகுபடி செய்வதற்கு முன்பாக விளைநிலங்களில் உழவியல் முறைகள் குறித்தும், பயிர் கழிவுகளை உரமாக மாற்றுவது, களைக்கட்டுப்பாடு, ஒருங்கிணைந்த இடு பொருள்களை பருவத்திற்கு கேற்ப வழங்குதல், குறுத்துப் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள், தோட்டக்கலை பயிர்களை கவாத்து செய்வது போன்றவைகள் தொடர்பாக செயல்முறை விளக்க பயிற்சி அளித்தனர். அதைத் தொடர்ந்து மா மரக்கன்றுகளை அடர் நடவு முறையில் செய்து அதிகமான சாகுபடி செய்து லாபம் பெறுவதற்கான ஆலோசனைகளையும் எடுத்துரைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com