கோடியக்கரைக்கு அப்பால் மீன்பிடித்துக்கொண்டிருந்த வேதாரண்யம் மீனவர்கள் நால்வரை இலங்கை கடற்படையினர் தாக்கி திங்கள்கிழமை விரட்டியடித்துள்ளனர்.
புஷ்பவனம் மீனவர் காலனியை சேர்ந்த நவமணி(33) என்பவருக்கு சொந்தமான கண்ணாடியிழைப் படகில்,இதேபகுதி மீனவர்கள் பன்னீசெல்வம்(38),ஆனந்த்(30),ராசேந்திரன்(50) ராமசாமி(45)ஆகிய நால்வரும் சனிக்கிழமை பகல் கடலுக்குள் சென்றுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த அங்கு வந்த இலங்கை கடற்படை வீரர்கள் சேர்ந்த 9 பேர் மீனவர்ளை தாக்கியுள்ளனர்.
மேலும் அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள், ஐஸ் பெட்டி ஆகியவைகளை பறித்துக்கொண்டனர். பாதிக்கப்பட்ட மீனவர்கள் நால்வரும் வேதாரண்யம் அரசு மருத்துவணநையில் திங்கள்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.