விருதுநகர் மாவட்டத்தில் மானாவரி ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம் செயல்படுத்த ரூ.1.38 கோடி ஒதுக்கீடு

விருதுநகர் மாவட்டத்தில் மானாவாரி விவசாயிகள் பயனடையும் வகையில் ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம் செயல்படுத்துவதற்கு ரூ.1.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் மானாவாரி விவசாயிகள் பயனடையும் வகையில் ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம் செயல்படுத்துவதற்கு ரூ.1.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில் வேளாண்மைத்துறையின் மூலம் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி  வருகிறது. அந்த வகையில் மானாவாரி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வேளாண்மைத்துறை மூலம் மானாவாரி ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்த்திட்டத்தின் நோக்கமே மானாவாரி விவசாயிகள் மாதந்தோறும் வருவாயை ஈட்டுவதற்கு வழிவகை செய்வதே ஆகும். இதில், பயனடைய விரும்பும் விவசாயிகளுக்கு 1 ஏக்கர் வரையில் மானாவாரி நிலம் இருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு பண்ணைக்குட்டைகள் அமைத்தல், பழமரக்கன்றுகள் நடுதல், ஆடுகள், கோழிகள் மற்றும் கறவை மாடுகள் ஆகியவைகளுக்கு ரூ.1 லட்சம் வரையில் மானியம் வழங்கப்பட இருக்கிறது. நிகழாண்டில் இத்திட்டம் செயல்படுத்துவதற்காக சாத்தூர், வெம்பகோட்டை, வத்திராயிருப்பு, காரியாபட்டி, நரிக்குடி ஆகிய ஒன்றியங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து, திட்டம் செயல்படுத்தும் கிராமங்களில் மானாவாரி விவசாயிகள் குழு அமைக்கப்படும். அதன் மூலம் ஏழை எளிய விவசாய பயனாளிகள் தேர்வு செய்யப்பட இருப்பதாகவும் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் எஸ்.சுப்பையா தெரிவித்தார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com