புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

இணையதளத்தில் முன்பதிவு: ரயில் பயணச் சீட்டு பெற முடியாமல் தவிக்கும் மாற்றுத்திறனாளிகள்

முன் பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட பிரத்யேக அடையாள அட்டையைப் பயன்படுத்தி, ரயில் நிலைய கவுன்ட்டர்களில்

News image
Updated On :26 நவம்பர் 2015, 8:27 pm

முன் பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட பிரத்யேக அடையாள அட்டையைப் பயன்படுத்தி, ரயில் நிலைய கவுன்ட்டர்களில் மட்டுமே பயணச் சீட்டை பெற முடிகிறது, இணையதளத்தில் முன்பதிவு செய்ய முடியவில்லை என்று மாற்றுத் திறனாளிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
மாற்றுத் திறனாளிகளால் ரயில் நிலையங்களுக்குச் சென்று பயணச் சீட்டு பெறுவது சிரமம் என்பதற்காகவே இணையத்தில் சலுகை விலையில் பயணச் சீட்டு பெறும் முறையை ரயில்வே துறை கொண்டுவந்தது. அதற்காக, பிரத்யேகமான அடையாள அட்டையை ஏப்ரலில் வழங்கியது. பல மாதங்கள் ஆகியும், இந்தத் திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரமால் உள்ளது.
எப்படி, யாரிடம் பெறுவது?
இதன்படி, மாற்றுத் திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரயிலில் பயணம் செய்ய புகைப்படத்துடன் கூடிய தனி அடையாள அட்டை வழங்கப்படும். இதற்கு மருத்துவச் சான்றிதழ், புகைப்படத்துடன் கூடிய ஏதேனும் அடையாள அட்டை, வயது வரம்பு சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், 2 புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் அந்தந்த ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வணிகப் பிரிவை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டது.
இல்லையெனில், அலுவலக முகவரிக்கு சான்றிதழ்களின் நகல்களை தபாலில் அனுப்பலாம் எனவும் கூறப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்பு, விண்ணப்பித்தோருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதை வேறொரு பயணிக்காகப் பயன்படுத்தக்கூடாது. ஒவ்வொரு ரயில் பயணத்தின் போதும் அசல் அடையாள அட்டையையே பயன்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
அட்டை இருந்தும் பயனில்லை?
இருப்பினும், அடையாள அட்டை இருந்தும் பயனின்றி இல்லாமல் இருக்கிறது என்கின்றனர் மாற்றுத்திறனாளிகள்.
இதுகுறித்து மாற்றுத்திறனாளி சதீஷ் குமார் கூறியது:
ரயிலில் பயணம் செய்வதற்காக ஐஆர்சிடிசி இணையதளத்துக்கு சென்று பயணச் சீட்டு சலுகை விலையில் எடுக்க முன்பதிவு செய்ய முயற்சித்தேன், ஆனால் முடியவில்லை. இதையடுத்து, கவுன்ட்டரில் பயணச் சீட்டை முன்பதிவு செய்தேன்.
பல மாதங்களாக இந்த நிலை நீடிப்பது தொடர்பாக, ரயில்வே வணிகப் பிரிவில் முறையிட்டேன். அவர்கள் கூறியபடி, ஐஆர்சிடிசி அதிகாரிகளிடமும் முறையிட்டேன். பல யோசனைகள் சொன்னார்கள். அதனடிப்படையிலும் முன்பதிவு செய்ய முயற்சித்தேன், முடியவில்லை.
நேரில் தான் சென்று பயணச் சீட்டு பெற வேண்டுமென்றால் இந்த அடையாள அட்டை எதற்கு? இதற்கு தீர்வுதான் என்ன? என்றார் சதீஷ் குமார்.
இது குறித்து ரயில்வே வட்டாரத்தில் விசாரித்ததில், மாற்றுத் திறனாளிகளின் விவரங்கள் கணினியில் சேர்க்கப்பட்டுவிட்டன. எனினும், தொழில்நுட்பக் கோளாறு ஏதேனும் இருந்தால், அவை உடனடியாக சரி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.




 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.