அக்.11-ல் மனிதநேய மக்கள் கட்சி பொதுக்குழுக் கூட்டம்: ஜவாஹிருல்லாவுக்கு அழைப்பு

மனித நேய மக்கள் கட்சியின் அதிகாரபூர்வமான பொதுக் குழுக் கூட்டம் தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படவுள்ளதாக அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அண்மையில்
அக்.11-ல் மனிதநேய மக்கள் கட்சி பொதுக்குழுக் கூட்டம்: ஜவாஹிருல்லாவுக்கு அழைப்பு
Updated on
1 min read

மனித நேய மக்கள் கட்சியின் அதிகாரபூர்வமான பொதுக் குழுக் கூட்டம் தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படவுள்ளதாக அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அண்மையில் அறிவிக்கப்பட்ட பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி தெரிவித்தார்.

மேலும் கூட்டத்தில் பங்கேற்க கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவுக்கு அவர் வெள்ளிக்கிழமை அழைப்புவிடுத்துள்ளார்.

நாகை மாவட்டம்,வேதாரண்யம் வந்த தமீமுன் அன்சாரி,தனது சொந்த ஊரான  தோப்புத்துறை புதுப்பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகைக்கு பின்னர், ஜமாத்தார், பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்திப்பில், தனி மனித செயல்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், சொந்த கசப்புகளை விட்டுவிட்டு கட்சியின் நலனுக்காக சேர்ந்து செயல்படுவோம் என அவர் ஜவாஹிருல்லாவுக்கு அழைப்பு விடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com