ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீடுபுகுந்து இளம் பெண்ணிடம் கத்தியைக் காட்டி செயின் பறிப்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று மாலை வீட்டில் தனியே இருந்த பெண்ணிடம் தண்ணீர் கேட்பது போல வந்து, கத்தியைக் காட்டி அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை பறித்துச் சென்ற இருவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

News image
Updated On :17 அக்டோபர் 2015, 3:54 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று மாலை வீட்டில் தனியே இருந்த பெண்ணிடம் தண்ணீர் கேட்பது போல வந்து, கத்தியைக் காட்டி அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை பறித்துச் சென்ற இருவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர், கோட்டைத்தலைவாசல் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் மனைவி பிரியா (21). வீட்டில் இருந்த பிரியாவிடம் இருவர் வந்து தண்ணீர் கேட்டுள்ளார்கள். அவர் உள்ளே சென்று கொண்டு வந்த சமயம், இருவரும் கத்தியைக் காட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்துக் கொண்டு, அவர்கள் வந்த லோடு வேனில் தப்பிச் சென்றுவிட்டார்கள்.

இது குறித்து பிரியா ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.