விராலிமலையில் இளம் பெண் மாயம்

விராலிமலை அருகே திருமணம் செய்து கொடுத்த தன்னுடைய மகளை காணவில்லை என்று அவரது தந்தை காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் அளித்துள்ளார்.
Published on
Updated on
1 min read

விராலிமலை அருகே திருமணம் செய்து கொடுத்த தன்னுடைய மகளை காணவில்லை என்று அவரது தந்தை காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் அளித்துள்ளார்.

விராலிமலை அருகே உள்ள தேராவூர் கீழக்காட்டைச் சேர்ந்தவர் சுப்பிரமணி விவசாயி, இவரது மனைவி பொன்னம்மாள்(21) இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர், இந்நிலையில் பொன்னம்மாள் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு தன்னுடைய தாய் ஊருக்கு சென்று வருவதாக கூறி கடந்த 28 ம் தேதி வீட்டை விட்டு சென்றவர் வீடுதிரும்பவில்லையாம்.

உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் பொன்னம்மாள் கிடைக்காத  நிலையில் விராலிமலை காவல் நிலையத்தில் பொன்னம்மாளின் தந்தை பழனிவேல் அளித்த புகாரினை தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளர் ந. புகழேந்தி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com