விராலிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைகாற்றுடன் கூடிய பலத்த மழை

விராலிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை இடி மற்றும் சூறைகாற்றுடன் கூடிய பலத்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக
Published on
Updated on
1 min read

விராலிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை இடி மற்றும் சூறைகாற்றுடன் கூடிய பலத்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்ததால் விவாசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

விராலிமலையில் வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது. இந்நிலையில் மாலை 3.50 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் இருட்ட தொடங்கியதுடன், பலத்த காற்று வீசத் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து, இடி, சூறைகாற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. திடீரென மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. கடந்த சில நாட்களாக பொதுமக்களை வாட்டி வதைத்து வந்த வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொது மக்கள் மற்றும் விவாசாயிகள்  மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com