செய்யாறு அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்மா குழந்தை நல பரிசு பெட்டக திட்டத்தை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தை மற்றும் தாய் பயன் அடையும் வகையில் அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த திங்கள்கிழமை (செப்.7) சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
அம்மா குழந்தை நல பரிசு பெட்டக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பெட்டகத்தில் குழந்தையை பராமரிப்பதற்குத் தேவையான துண்டு, குழந்தை உடை, குழந்தை படுக்கை, குழந்தை பாதுகாப்பு கொசுவலை, குழந்தை நாப்கின், குழந்தைக்கான எண்ணெய் டப்பா, குழந்தைக்கு ஷாம்பூ, சோப்புப் பெட்டி, நக வெட்டி, கிலுகிலுப்பை, பொம்மை, சுத்தமான கைகளுடன் குழந்தைகளை பராமரிக்க கை கழுவும் திரவம், பிரசவித்த தாய்க்கு சோப்பு, பிரசவித்த தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தாய்ப்பாலை அதிகரிக்கவும், சௌபாக்கியா சுண்டிலேகியம் அனைத்தையும் வைத்துக் கொள்ள ஒரு பெட்டகம் என 16 பொருட்கள் அடங்கியுள்ளன.
இத்திட்டத்தினை தொடங்கி வைத்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் செய்யாறு அரசு மருத்துவமனையில் பிறந்த 41 குழந்தைகளுக்கு அம்மா குழந்தை நல பரிசு பெட்டகத்தை வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.