
வங்கக் கடலில் நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலையால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் காரைக்கால் மாவட்ட விசைப்படகு, பைபர் படகுகள் அனைத்தும் வியாழக்கிழமை கடலுக்குள் செல்லவில்லை.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி அவ்வப்போது உருவாகி வருவதால் தொடர் மழை பெய்துவருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு இலங்கை, வட தமிழகத்தையொட்டி உள்ள தென் மேற்கு வங்கக் கடலில், காற்றழுத்த தாழ்வு மையம் கொண்டிருப்பதால், தொடர் மழை பெய்துவருவதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து வழக்கமாக கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகள் புதன்கிழமை இரவு முதல் நிறுத்தப்பட்டன. முன்னரே கடலுக்கு சென்ற படகுகள் மட்டும் வியாழக்கிழமை துறைமுகத்திற்கு திரும்பி வந்தது.