

சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு மத்திய அரசினை வலியுறுத்தி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஓ .பன்னீர்செல்வம் தலைமையில் இன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம் வருமாறு:
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு மத்திய அரசினை வலியுறுத்த வேண்டும்.
நாடாளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதாவிற்கு முழு உருவ வெண்கலச்சிலை அமைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை
ரூ.15 கோடி செலவில் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைப்பதற்கான அரசாணை
சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தின் பெயரை மாற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இன்றைய அமைச்சரவை கூட்டடத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.