திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே இயங்கி வரும் சேவாலயா மகாகவி பாரதியார் பள்ளியில் 99.3% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருவள்ளூரை அடுத்த திருநின்றவூர் கசுவா கிராமத்தில் சேவாலயா ஆதரவற்றோர் இல்ல வளாகத்தில் மகாகவி பாரதியார் பள்ளி இயங்கி வருகிறது.
இப்பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை 153 மாணவர்கள் எழுதினர். அதில் 152 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 99.3.
மேலும் இப்பள்ளியில் முதல் மதிப்பெண்ணாக ஒரு மாணவர் 487 மதிப்பெண் பெற்றுள்ளார். 7 மாணவர்கள் 450-க்கு மேல் மதிப்பெண்ணையும், 105 மாணவர்கள் 75 சதவீதத்துக்கு மேலும் மதிப்பெண் பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.