முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பு: அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
உடல்நலக்குறைவு காரணமாக அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ' முதல்வர் ஜெயலலிதாவிற்கு நுரையீரல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஊட்டசத்து மற்றும் பிசியோதெரபி சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது. சுவாச உதவி சிகிச்சையும் தொடர்ந்து தரப்பட்டு வருகிறது.
மேலும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...