மிக மிக முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்ள உள்ளேன்: ராமமோகன ராவ்

மிக மிக முக்கியமான விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன் என்று சென்னை அண்ணாநகரில் உள்ள வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ராம மோகன ராவ் கூறியுள்ளார்.
மிக மிக முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்ள உள்ளேன்: ராமமோகன ராவ்
Updated on
1 min read

சென்னை: மிக மிக முக்கியமான விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன் என்று சென்னை அண்ணாநகரில் உள்ள வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ராம மோகன ராவ் கூறியுள்ளார்.

வருமான வரி சோதனை மற்றும் புகார்கள் குறித்து விளக்கம் அளிக்க இன்று காலை சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார் ராமமோகன ராவ்.

அப்போது, வருகை தந்திருக்கும் அனைத்து பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றி. மேலும், எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,  காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு நன்றி. முன்னாள் இணை அமைச்சரும், அதிமுக எம்பியுமான எஸ்.ஆர். பாலசுப்ரமணியம், பத்திரிகையாளர் தீரன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்கள் வீட்டில் என்னென்ன பொருட்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினார்கள் என்பது குறித்துஅளித்த பஞ்சனாமாவை இங்கே சமர்ப்பிக்கிறேன்.

என்னென்ன ரகசிய ஆவணங்களை தலைமைச் செயலகத்தில் உள்ள எனது அறையில் இருந்து கைப்பற்றினார்கள் என்பது குறித்து உங்களுக்கு தெரிவிக்கிறேன் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com