சென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

வேலூர் கல்லூரியில் விழுந்தது விண்கல் அல்ல: நாசா

தமிழ்நாட்டின் வேலூர் அருகே ஒரு பொறியியல் கல்லூரியில் விழுந்தது விண்கல் அல்ல என்று நாசா கூறியுள்ளதாக நியூயார் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 9:59 pm IST

தமிழ்நாட்டின் வேலூர் அருகே ஒரு பொறியியல் கல்லூரியில் விழுந்தது விண்கல் அல்ல என்று நாசா கூறியதாக நியூயார் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகிலுள்ள பாரதிதாசன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் வானத்திலிருந்து கீழே விழுந்த மர்மப் பொருள் (விண்கல்) குடிநீர்த் தொட்டி அருகே பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இதில் குடிநீர் தொட்டி அருகே நின்றிருந்த கல்லூரியின் பேருந்து ஓட்டுநர் காமராஜ் படுகாயமடைந்து இறந்தார். மேலும் ஓட்டுநர் சுல்தான், தோட்டத் தொழிலாளர்கள் சசிகுமார், முரளி, கல்லூரி மாணவர் சந்தோஷ் ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர்.

சம்பவ இடத்திலிருந்து கிடைத்த பொருள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் நேற்று ஆய்வு செய்தனர். விண்கல் விழும் என்பது குறித்த கணிப்பு ஏதும் இல்லாத நிலையில், விண்கல் விழுந்திருந்தால் இது ஓர் அரிய நிகழ்வு ஆகும் என அந்நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜி.சிஅனுபமா கூறினார்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, வேலூர் சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட புகைப்படங்களை பார்க்கும் போது அது தரையில் நடைபெற்ற ஒரு வெடிவிபத்து போன்று உள்ளது என கூறியுள்ளது.

விண்கல் விழுந்து ஒருவர் இறப்பது என்பது அரிதிலும் அரிதாக நடைபெறும் நிகழ்வு என நாசா விஞ்ஞானி லிண்டலி ஜான்சன் கூறியுள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு ரஷ்யாவில் விண்கல் விழுந்ததில் பலர், குறிப்பாக குழந்தைகள் காயமடைந்தனர்.

விண்கல் வானிலிருந்து விழும் நிலையில் பூமியை அடையும்போது குளிர்ந்துவிடும். வேலூரில் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட பொருள் சில கிராம் எடையே உள்ளது. அது பூமியில் உள்ள பாறையின் துண்டாக இருக்கலாம் என நாசா கூறியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.